Friday, March 29, 2024
Homeகல்விகட்டுரைகட்டுரை - பெண்ணியம் Essay Penniyam - Feminism 

கட்டுரை – பெண்ணியம் Essay Penniyam – Feminism 

- Advertisement -

Essay Penniyam Feminism  சிறுவர் கட்டுரை

- Advertisement -

இன்றையச் சூழலில் பெண்ணியவாதிகள் பெண்ணியத்தை இன, சமூக, கலாச்சார மத எல்லைகளைக் கடக்கும் அடிப்படை இயக்கமாகவே கருதுகிறார்கள்.

பெண்ணியம் பல்வேறு குறிக்கோள்களை கொண்டது

- Advertisement -

· பெண்ணியம் என்பது அனைத்து வகைப் பெண்களுக்கும் சம உரிமை கிடைக்கப் போராடுதல்
· ஆண், பெண் இருபாலரும் சமத்துவ உரிமைகளை ஒன்றாக இணைந்து நிலைநாட்டுதல்
· போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
· பொருளாதார சுதந்திரம் பெற்றுத் தருதல்
· ஆணாதிக்கத்தைக் கண்டறிந்து அகற்றுதல்
· பெண்களின் மீதான ஒடுக்குமுறைகளைக் களைதல்
· பெண்களின் நலனைப் போற்றிப் பாதுகாக்கும் சட்டங்களை வடிவமைத்து செயல் படுத்துதல் போன்ற குறிக்கோள்களைக் கொண்டு பெண்ணியம் ஒரு இயக்கமாக அடையாளம் காணப்படுகிறது.

- Advertisement -

தன்னம்பிக்கை மட்டுமே பெண்களை முன்னேற்றம் என்றும், தாயாகிய பெண் மட்டுமே குடும்பத்தை பாரத்தை சுமக்கிறார். அவர்தான் குடும்பத்தை வழிநடத்துகிறார் என்றும் தெரிவித்தார். பெரும்பாலான குடும்பத்தில் அம்மாதான் முதுகெலும்பு என்று தெரிவித்த அவர், பெண்ணியம் என்பது ஆண்களுக்கு எதிரானது அல்ல.

பெண் சுதந்திரம் பற்றி ஒருவருக்கொருவர் வித்தியாசமாக ஒரே விசயங்களை பேசுவார்கள். அது எல்லாமே ஏற்றுக்கொள்ளும் வகையில் தான் இருக்கும். ஆனால், ஒருசிலர், புரியாமல் குழப்பத்தில் இருப்பார்கள். சுதந்திரம் என்பது நாம் இஷ்டத்துக்கு எதுவும் செய்வது என்று. அதக்கு எதிர்ப்புகள் வருகின்ற போது, பெண் சுதந்திரம் வேண்டும். என்று சொல்லிக் கொள்வார்கள்.

ஆண்களுக்கு நிகராக இருப்பதும், அவர்களை வெற்றிகொள்வதும், நினைத்ததை எல்லாம் முடிப்பதுவும் சுதந்திரம் என்று நினைத்துக்கொண்டு இருப்பது பெண் சுதந்திரம் ஆகாது. உன் தேவைகளை உன் முயற்சியால் செய்ய சக்தி இருந்தால், துணிந்து செய், அது யாருக்கும் தீங்கு விளைவிக்காமல் இருந்தால் போதும். இதற்கு தடை ஏதும் இல்லை என்றால் உனக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது. அதற்கு தடை இருந்தால் அதை உடை. அது பெண் சுதந்திர போராட்டம்.

உண்மையில் அந்தகால பெண்கள் தான் சுதந்திரம் இன்றி இருந்தார்கள். அந்த நிலையிலும் அவர்கள் பலதுறைகளில் வெற்றி கண்டார்கள். அவர்கள் சுதந்திரத்தை நமக்கு போராடி பெற்று தந்துவிட்டார்கள். இந்த காலத்தில் அந்த அளவிற்கு போராட்டம் எதுவும் இல்லை
பெண் சுதந்திர போராட்டம் எல்லாம், பெண்கள் சமையலறையில் மட்டும் இருந்த காலம்.

அவை, எழுத்தாளர் அம்பை அவர்களின் எழுத்துக்கள் பிரதிபலிக்கும். ஆண்களுக்கு என்று ஒரு மொழி பெண்களுக்கென்று ஒரு மொழி. ஆண்களுகென்று ஒரு வேலை. பெண்களுக்கென்று ஒரு வேலை. இவை எல்லாம் இப்போது இல்லை.
தமிழ்நாட்டில் இதுவரை பெண் பேருந்து ஓட்டுநர் உரிமம் பெறாத நிலையில் இருந்ததை, இன்று சர்மிளா அவர்கள் நிறைவேற்றி விட்டார்.

Essay Penniyam Feminism  சிறுவர் கட்டுரை
Essay Penniyam Feminism  சிறுவர் கட்டுரை

கல்வி அறிவு இல்லாத காலங்களில், பெண்களின் பெருமை தெரியாமல் இருந்தது. இன்று கல்வி அறிவை பெற்றுவிட்டார் கள். கல்வி அறிவை பென்ற பெண்களுக்கு தெரியும், அடுத்த தலைமுறையை இந்த தலைமுறையில் இருந்து எப்படி முன்னேறுவது என்று.

வலிகள் ஆயிரம் இருந்தாலும் மனதளவில் உறுதி கொண்டவள். அவள் நாட்டையும் வீட்டையும் ஆளும் ஆளுமை உடையவள்.
அம்மாவின் பெருமையை பேசாதவர்கள் யாரும் இல்லை. பெண்மையின் சக்திக்கு சான்று ஒன்று போதும், அம்மா. பெண்மையை போற்றுவோம்.

 

Kidhours – Essay Penniyam Feminism ,Essay Penniyam , மகளீர் தினம் கட்டுரை

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.