Cats Island சிறுவர்களுக்கான உலக செய்திகள்
கிழக்கு ஆசியாவில் ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைக்கு அப்பால் உள்ள ஒரு சிறிய தீவில், மனிதர்களை விட பூனைகள் அதிகமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த தீவு,தசிரோஜிமா பட்டு(Tashirojima), பூனைகள் மற்றும் தீவுவாசிகள் இடையே உள்ள ஆழமான அழகான பிணைப்பை பிரதிபலிக்கும், கடந்தகால வரலாற்று ரீதியாக, Tashirojima பட்டு வளர்ப்பு, பட்டு உற்பத்திக்கு பெயர் பெற்ற ஒரு பிரதேசமாகும்
அங்கு விளைவிக்கப்படும் பயிரினங்களை பாதுகாக்கும் பொருட்டு விவசாயிகள் எலிகளை விரட்ட பூனைகளை வளர்த்து, அவற்றின் மதிப்பான பட்டுப்புழு கொக்கூன்களைப் பாதுகாத்தனர். அதிகமாக , பூனைகள் நல்ல அதிர்ஷ்டத்தையும் பெரிய அளவிலான மீன்களையும் கொண்டு பாரிய பொருளாதார லாபத்தை கொண்டு வருவதாக மீனவர்கள் நம்பினர்.
ஏதேனும் அனர்த்தங்கள் நடைபெறுவது தொடர்பான முன்னெச்சரிக்கை அறிவுறுத்தலுக்கவும் கடலுக்குச் செல்வதற்கு முன் வானிலையை கணிக்க மீனவர்கள் பூனைகளின் நடத்தையை அவதானித்த பின்னர் செல்வார்கள் என்றும் கூறப்படுகின்றது.
![மனிதர்களை விட பூனைகள் அதிகமாக இருக்கும் பிரதேசம் பற்றி தெரியுமா? Cats Island 1 Cats Island சிறுவர்களுக்கான உலக செய்திகள்](https://www.kidhours.com/wp-content/uploads/2024/05/Untitled-design-2024-05-29T212543.664.jpg)
பூனைகளுக்கும் தீவுவாசிகளுக்கும் இடையிலான உறவு பல தலைமுறைகளாக நன்றாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த அறிக்கையின்படி, ஒரு நாள், ஒரு மீனவர் தவறுதலாக ஒரு பூனையை அடித்து காயப்படுத்தியதாகவும், இதனால் தீவுவாசிகள் அதன் நினைவாக பூனை ஆலயத்தை கட்டினார்கள் எனவும் வரலாற்று சான்றுகளைக் கூறப்படுகிறது.
Kidhours – Cats Island சிறுவர்களுக்கான உலக செய்திகள்,Lot of Cats Living Area
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.